150 ஆண்டுகள் பழமையான ஆலமரம்.. வேரோடு அகற்ற பட்டு மறுநடவு..!
150 years old banyan tree in thiruvallur district
தமிழகத்தின், திருவள்ளூர் மாவட்டம் அருகே 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒரு இருக்கிறது. அதனை வேரோடு பிடுங்கி கொசஸ்தலை என்னும் ஆற்றின் கரையோரம் நடும் பணி நடைபெற்று வருகிறது.
இதை தொடந்து, சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலைக்கான விரிவாக்க பணியானது ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததாகக் கூறப்படும் இந்த மரத்தை அகற்றும் நிலை வந்தது.
இந்த தகவல் அறிந்து வந்த, ஓசை என்கிற தனியார் அமைப்பு, ஆலமரத்தை அப்படியே வேருடன் அகற்றி கொசஸ்தலை ஆற்றில் நட முடிவு செய்திருக்கிறது. மரத்தை நடவு செய்ய தேர்வான இடத்தில் 4 நாட்களாக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமையன்று பொக்லைன் உதவியுடன் வேருடன் மரம் அகற்றப்பட்டது. தொடர்ந்து இந்த மரத்தை மறுநடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
English Summary
150 years old banyan tree in thiruvallur district