திருமணமான 29 வயது பெண்ணிடம் 20's கிட்ஸ் சிறுவன் செய்த தகாத வேலை!!
15 years old boy abused 29 years old married girl
கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி நகரில் உள்ள பெரியார் நகரில் வசித்து வரும் திருமணமான 29 வயதுடைய பெண் நேற்று இரவு உறங்குவதற்கு முன் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்று இருக்கிறார்.
அப்போது, மறைந்திருந்து அந்த பெண்ணை நோட்டமிட்டுக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் ஒருவன் அந்த பெண்ணை வழிமறித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். பின்னர் அவனிடமிருந்து தப்பித்து ஓடிய அந்தப் பெண் வீட்டிற்கு சென்று நடந்தது குறித்து தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் சிறுவன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது நடந்த சம்பவத்தை உறுதி செய்தது. பின்னர் அந்த சிறுவனை கைது செய்த போலீசார் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த சிறுவன் 'சிறுவர் சீர்திருத்த பள்ளி'யில் ஒப்படைக்கப்பட்டார். 15 வயது சிறுவன் 29 வயது திருமணமான பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
15 years old boy abused 29 years old married girl