டீ விற்க சென்ற சிறுவன்., திடீரென நிகழ்ந்த விபரீதம்.! ரத்தவெள்ளத்தில் மிதந்த சோகம்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில், சிறுவன் ஒருவன் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவருக்கு 15 வயதில் ரியாஸ் என்ற மகன் இருக்கிறான். 

இன்று பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது, சிறுவன் ரியாஸ் டீ விற்க சென்றுள்ளான். அப்பொழுது கட்டுமான தொழிலாளர்கள் இடம் டீ விற்பதற்காக ஆறாவது மாடியை நோக்கி சென்று டீயை கொடுத்து விட்டு கீழே இறங்கி வரும் பொழுது தவறி விழுந்துள்ளார். 

இதில் ரியாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கின்றார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரியாஸ் விழுந்து பலியான சம்பவத்தில் கட்டிட உரிமையாளரான சாகுல் ஹமீது மேல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அஜாக்கிரதையாக கட்டடம் கட்டி, அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் விளைவித்த காரணத்தால் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 years boy died fall from 6th Floor 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->