தாய் மாமன் மற்றும் நண்பர்களால் சிறுமிக்கு நடந்த கொடூரம்.. விழுப்புரத்தில் நடந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


15 வயது சிறுமியை தொடர் கூட்டு பாலியல்வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்கூடலூர் கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த சில நாட்களாக உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்து காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரது ஆசிரியை மாணவியை அழைத்து பேசியுள்ளார். அவரிடம் மாணவி தாய்மாமன் சசி என்பவர் தன்னை பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சசி, மணிகண்டன், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்து மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,. மேலும், பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட 7 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 year old girl Gang Raped in Vizhuppuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->