மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு! குவிக்கப்பட்ட போலீசார்!
144 in tuticorin
தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதி பாண்டியனின் நினைவு நாளை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் நினைவு நாளை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் விதமாகும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் ஐந்துக்கு மேற்பட்டோர் கூடவும், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவும், ஜோதி எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சி மற்றும் சமுதாய கொடிகள் கொண்டு வரவும், வாடகை வாகனங்களில் விழாவிற்கு மக்களை அழைத்து வரவும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.