உரிமை பிதுக்கப்பட்டுள்ளது.. அடங்க மறுத்து தொண்டை கிழிய பேசிய தம்பி.. கதற கதற வைத்து செய்த காவல்துறை.!!
144 curfew youngster argument with police later gives treatment
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 5 மணிவரை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தேவையற்று மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவு அனாவசியமாக வெளியே சுற்றி வருகின்றனர். மேலும், இளைஞர்கள் அனாவசியமாக சுற்றி வருகின்றனர்.
இவ்வாறாக சுற்றி வரும் பல இளைஞர்களை காவல் துறையினர் எச்சரித்து, நூதன தண்டனை கொடுத்து வரும் நிலையில் பல இடங்களில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றது. பல இடங்களில் காவல் துறையினர் அனாவசியமாக சுற்றித்திரிந்த நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்து வந்தனர்.
இந்த நிலையில், உரிமை மறுக்கப்பட்டு, பிதுக்கி வைக்கப்பட்டு இருந்த வாலிபர் ஒருவர் காவல் துறை அதிகாரிகளிடம் பொங்கி எழுந்தார். மேலும், இது என ஊர்.. எடப்பாடியை வர சொல்லு, ஓட்டு கேட்க வருகிறார்கள்.. என்னிடம் வந்து கூற சொல்.. ஆதிக்க கரோனவை என்னிடம் காட்டு என்று பெண் காவல் அதிகாரியிடம் அத்துமீறி பேசியுள்ளான்.
இதனையடுத்து பெண் காவல் அதிகாரிகள் அவனிடம் இருந்து விலகி சென்று, காவல் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிதுக்கப்பட்டு பொங்கியெழுந்து அடங்க மறுத்து வசனம் பேசிய விஷம புல்லிங்கோவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கவனித்தவுடன், ஐயையோ என்னை விட்டுவிடுங்கள் என்று கதறியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
144 curfew youngster argument with police later gives treatment