14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் அருகில்., 14வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் கொடுமையில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி. இவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருப்பூர் பொட்டிக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் கூலி வேலைக்கு சித்தாள் வேண்டும் என்று கேட்டு சிறுமியை அழைத்து சென்றுள்ளான்.

அன்று இரவு மகள் வீடு திரும்பாததால்., அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில்., நேற்று மதியம் அந்த சிறுமி திருப்பூர் பேருந்து நிலையத்தில் நிற்பதாக தகவல் வந்தது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார்., சிறுமியை மீட்டு திருப்பூருக்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் சிறுமியிடம் விசாரித்ததில் சுப்பிரமணி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிந்துள்ளது,.

இதற்கிடையில் சுப்பிரமணி தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து., போலீசார் விரைந்து சென்று அவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 age girl was raped by the building worker


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->