தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் மகள் எடுத்த விபரீத முடிவு.. ஈரோடு அருகே நிகழ்ந்த சோகம்...! - Seithipunal
Seithipunal


12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம். ரங்கநாதபுரம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமக்கண்ணன்.  இவருக்கு பிரியா என்ற மனைவியும் கிருத்திகா என்ற மனைவியும் உள்ளனர். கிருத்திகா அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். ராமக்கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.

தந்தை மீது அதீத பாசம் வைத்துள்ள கிருத்திகா இதனால், மன உளைச்சலில் இருந்ததாக கூறபடுகிறது.  இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th grade student Committed Suicide in Erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->