திருவள்ளூர் : உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் பாலாஜி(17) தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அறைக்குள் சென்ற பாலாஜி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பாலாஜியின் தங்கை பார்த்தபோது, பாலாஜி தூக்கில் தொங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் பாலாஜியை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் பாலாஜி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.

அந்த கடிதத்தில், என்னை நீங்கள் நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் விரும்பும் படிப்பை எனக்கு படிக்க விருப்பமில்லை. தங்கையின் வாழ்க்கையாவது அவரது விருப்பப்படி அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th class student suicide in Tiruvallur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->