12 வயது சிறுமி..பாழடைந்த வீட்டில் நடந்த கொடூரம்..சடலமாக கிடந்த அவலம்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நெல்லை மாவட்டம் உவரி அருகே 7 ஆம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.

12 வயது சிறுமி ஒருவர், கடற்கரை கிராமமான கூட்டப்பனைச் சேர்ந்தவர். அதே ஊரில் உள்ள புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமி நேரம் கடந்தும் வீட்டுக்கு வரவில்லை. இதை தொடர்ந்து, அருகே உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து, தகவலறிந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தார்கள்.

மாணவி பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். 

சுற்றுவட்டாரத்தில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும் அதற்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள சிலர் இதுபோன்ற கொடூரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 years old child death in nellai district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->