அரை நிர்வாண கோலத்தில் 12 வயது சிறுமி.,மரணத்தில் மர்மம்., சாலைமறியலில் பொதுமக்கள்.!
12 years child dead in uvari
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் உவரி அருகில், பள்ளி மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்தார்கள். உவரி அடுத்த கூட்டப்பனை கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சமந்தப்பட்ட சிறுமி காணாமல் போனார், இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டாள். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி விடுவித்தனர்.
இந்த நிலையில் சிறுமி கொலை வழக்கில் உவரி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் திசையன்விளை தாசில்தார் ஆவுடைநாயகம் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்கள்.
English Summary
12 years child dead in uvari