நண்பர்களுடன் குளிக்க சென்ற 11ம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்..!
11th grade student drowns
நண்பருடன் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்கள் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக சையது அஃப்ரித் என்ற மாணவன் தண்ணீரில் மூழ்கினார்.
இதையடுத்து , மற்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
11th grade student drowns