64 -வது நாயன்மார்களில் ஒருவரான கிருபானந்த வாரியாரின் 117 -வது பிறந்தநாள் விழா..!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் அறுபத்து நான்காவது நாயன்மார்களில் ஒருவருமான, ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியவருமான திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் அவதரித்து 117 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

அவர் அவதரித்த காங்கேயநல்லூரில் அவருடைய நினைவிடத்தில், உள்ள திருவுருவ சிலைக்கு, வேலூர் மாவட்ட எம்.பி. கதிர் ஆனந்த், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும் வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார்,  மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வள்ளிமலை ஆதினம் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடந்த 2021ம்  ஆண்திலிருந்து இவரது பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து  2-வது ஆண்டாக இன்று வாரியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

117th birthday celebration of Kripananda Wariyar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->