11 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற 14 வயது சிறுவன்.. திருப்பூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


அமராவதியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இதே பகுதியில் 14 வயது சிறுவன் மளிகை கடையில் பணியாற்றி வருகிறான். 

இந்நிலையில், சம்பவத்தன்று 14 வயது சிறுவன் 11 வயது சிறுமி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளான். மேலும், அத்துமீறவும் முயன்றுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறிக்கொண்டு தனது தாய் தந்தையரிடம் விஷயத்தை கூறியுள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 14 வயது சிறுவனை அங்குள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 year child girl rap attempt by 14 year old boy in Tiruppur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->