புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்.. பிரியாணி வாங்கி சாப்பிட்ட 11 பேருக்கு வாந்தி, மயக்கம்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரை வேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வேலை செய்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் இருந்து 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட கட்டிட தொழிலாளர்கள் 11 பேரும் வாந்தி மயக்கம் எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த கட்டிட உரிமையாளர் சித்திரை வேல் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அறந்தாங்கி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 people vomited and fainted after eating biryani in aranthangi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->