பத்தாம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த மாணவி.. காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி, தன் வீட்டில் உள்ள இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேடியுள்ளனர். 

இதையடுத்து இது குறித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், மாணவி பள்ளிக்கு போகவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் பள்ளி முடிந்ததும் அந்த மாணவியுடன் படிக்கும் மாணவிகளை காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த மாணவிகளின் பெற்றோர்கள் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது மாணவி உடன் படிக்கும் மாணவன் ஒருவன் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் தீவிரமாக தேடினர். அதில் அவர்கள் திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் காதலிப்பதாகவும், நண்பன் அறையில் மாணவனுடன் தங்கியிருந்துவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போக முடிவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் பெற்றோரையும் அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class student love with classment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->