பத்து வயது சிறுமியை துடிக்கத்துடிக்க கற்பழித்து, பின்னர் வீசி எறிந்த கொடூரம்.!
10 years old girl rape and killed in maduravoyal
சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் 10 வயது சிறுமி நேற்று இரவு நேரத்தில் திடீரென மயமாகியுள்ளார். இவரை தேடிய சமயத்தில், சிறுமி வீட்டின் பின்புறத்தில் பலத்த காயத்துடன் இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியான பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நேரத்தில், சிறுமி வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையின் போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்ததன் பின்னர், சிறுமியின் வீட்டு மாடியில் குடியிருக்கும் சுரேஷ் (29) என்பவர் சந்தேகத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டார்.
இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் சிறுமி கத்தியதால் மாடியில் இருந்து தூக்கி வீசியதாக தெரிவித்துள்ளார். சுரேஷ் சென்டரிங் வேலை பார்த்து வருவதும், மனைவியை பிரிந்து வாழுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. இந்த விஷயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
English Summary
10 years old girl rape and killed in maduravoyal