10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை.. சென்னையில் பேரதிர்ச்சி..!!
10 year child sexual abuse and murder in chennai
சென்னையில் உள்ள மதுரவாயல் எம்.எம் பகுதியை சார்ந்தவர் சீனிவாசன். இவரது மகளான 10 வயதுடைய பெண் குழந்தை, பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனையடுத்து குழந்தையை காணாது சிறுமியை தேடி வந்த பெற்றோர்கள், சிறுமியை காணாது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நேரத்தில், சிறுமி அவரது வீட்டின் பின்புறத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தது போல பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இதே பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் சுரேஷ் என்பவனை கைது செய்தனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சிறுமி மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும், சுரேஷால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
10 year child sexual abuse and murder in chennai