நியாபக மறதியால் நிம்மதியாக வாழ முடியாது.. மாணவி எடுத்த விபரீத முடிவு..!
+1 Student Suicide Near Erode
ஞாபக மறதி இருப்பதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு திருமணமாகிஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு நியாபக மறதி இருந்ததாக தெரிகிறது. இதனால், சரிவர படிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததுள்ளர. இந்நிலையில், யாரும் வீட்டில் இல்லாத போது தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
+1 Student Suicide Near Erode