அதிரடி சலுகை அறிவித்த கடை உரிமையாளர்..! குவிந்த மக்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


வாடிக்கையாளர்களை அவர்கள் பக்கம் இழுக்க சந்தைகளில் அவ்வப்போது, கடை உரிமையாளர்கள் சலுகைகளை அள்ளி இறைத்து வருவது வழக்கம். அந்த வகையில் கடை உரிமையாளர் ஒருவர் அவர் கடையில் விற்கும் மீனை, ஒரு கிலோ ஒரு ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள, காரைக்குடி பர்மா காலனி பகுதியில் புதியதாக மீன்கடை ஒன்று திறக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழா இன்று (10/11/2019) நடைப்பெற்றது. 

இந்த விழாவில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர அவரது கடைக்கு முதலில் வரும் 100 நபர்களுக்கு 1 கிலோ மீன் ரூ 1 க்கு விற்பனை, மற்றும் அடுத்த வரும் 100 நபர்களுக்கு 100 டிபன் பாக்ஸ் இலவசம் என்றுவிளம்பரம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, காலை 06.00 மணிக்கு முன்னரே அசைவ பிரியர்கள் கடை முன் வரிசையில் நின்று வாங்கி சென்றார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 kg fish 1 rupee


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->