ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு தடை.. ஐசிசி அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்திற்கு இடைக்கால தடை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சஷாங்க் மனோகர் கூறியவை, ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக அவசரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படுவது கிடையாது.

கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்பதில் ஐசிசி உறுதியாக உள்ளது. ஆனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய அளவில் அரசியல்தலையீடு இருக்கின்றனர். கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணி தேர்வுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது எனவே ஐசிசியின் கொள்கையின்படி, ஒரு நாட்டின் கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு  இருப்பதை விரும்பவில்லை. 

இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்திற்கு இடைக்காலத் தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிதி உதவியும் உடனடியாக நிறுத்தப்படுகிறது. விதிகளின் அடிப்படையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர வேண்டும் என விரும்புகிறது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zimbabwe cricket team banned for ICC


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->