உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவர் தான் முக்கிய காரணமாக இருப்பார்.! அடித்து கூறிய யுவராஜ் சிங்.!!
yuvraj singh says about hardik pandya
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மே 30-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது, இதில் நேற்று முன் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. அதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். அவர் கூறியவை, ரோகித் சர்மா மற்றும் கேப்டன் விராட் கோலி இவர்களில் ஒருவருக்கு இந்த தொடர் நல்ல தொடராக அமையும். ஆனால் என்னுடைய கணிப்பின் படி உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கப்போவது ஹர்திக் பாண்டியா தான்.
தற்போது ஹர்திக் பாண்டிய பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அனைத்திலும் ஃபார்மில் உள்ளார். ஒரு வேளை இந்திய அணி 2 பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இருக்கும்பட்சத்தில், ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இருப்பர். அது இந்திய அணிக்கு நல்ல ஒருசரிவிகித்தை கொடுக்கும்.
English Summary
yuvraj singh says about hardik pandya