ஓய்வு பெற்றதன் உண்மை காரணத்தை போட்டுடைத்த யுவராஜ் சிங்.! அவருக்கு இப்படி பிரச்சனையா.?!
yuvaraj shared his life history
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றது குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். இதுகுறித்து அவர், "மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நாம் சில விஷயங்களை நினைத்து பார்ப்பதில்லை. திடீரென ஒரு நாள் என்ன தான் நடக்கிறது நம் வாழ்வில் என்று தோன்றும். பல்வேறு காரணங்களுக்காக நான் இரண்டு மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்திருந்தேன்.
ஒருகட்டத்தில் கிரிக்கெட் எனக்கு மனதளவில் பிரயோஜனமாக இருக்காது என்று தோன்றியது. எனக்கு எப்போதும் கிரிக்கெட் விளையாடி ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், அது எனக்கு மன நிறைவை தரவில்லை. அந்த நேரத்தில் ஓய்வு பெறலாமா வேண்டாமா அல்லது வேறு ஒரு தொடரில் விளையாடலாமா என்று எனக்கு தோன்றியது. எப்போதாவது கிரிக்கெட்டை நான் மிகவும் மிஸ் பண்ணுவேன். ஆனால் அதிக வருடம் நான் கிரிக்கெட்டுடன் உறவாடி விட்டதால் இப்பொழுதெல்லாம் நான் அதை மிஸ் பண்ணுவதில்லை.
ரசிகர்களின் அன்புக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர வைக்கிறது கிரிக்கெட். எனக்கு அவர்களுக்கு மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுக்கொடுத்தது. மகிழ்ச்சியை கொடுத்தது. அதே புள்ளியில் 'நான் விடை பெற வேண்டும்' என்று நினைத்தேன். ஓய்வு பெற்ற நாளே எனது சுதந்திர நாளாக எனக்கு தோன்றியது. அது மிகவும் உணர்ச்சிகரமான நாள் அதை வார்த்தைகளால் என்னால் கூற முடியாது. கிரிக்கெட்டை விட்டு வெளிவந்த பின்னர் மனதளவில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். நீண்ட வருடங்களாக நான் சரியாக உறங்கவில்லை. அதற்கு பிறகு நான் நன்றாக தூங்கினேன்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
yuvaraj shared his life history