அணிக்கு எதிராக 'தோனி தான் இந்த சதியை செய்தார்'., யுவராஜ் சிங்கின் தந்தை வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டு!!
yuvarai father accusation to dhoni
நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரரும் எம்.எஸ்.தோனி, ஓய்வு பெறுவார் என தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளி வராத நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும்மூன்று20 வது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இதனிடையே, மேற்கிந்திய தீவுகவுக்கு சுற்றுப்பயணம்மேற்கொள்ளும் அணியில் .தோனி இடம்பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதே சமயம் இந்திய அணியில் தோனி இடம் பிடித்தாலும், ரிஷப் பந்த் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என, தகவல் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் தோல்வி குறித்து தோனியைக் குற்றம் சாட்டியுள்ளார். தோனி வேண்டுமென்ரே தான் நியூசிலாந்து அணியின் இலக்கை கடக்க இந்திய அணிக்கு உதவவில்லை என்றும் இந்திய அணியில் தன்னைத்தவிர, வேறு எந்த கேப்டனும், உலகக் கோப்பையைப் பெற்று, பெருமையை சம்பாதித்துவிடக்கூடாது என்பது தான் தோனியின் எண்ணம். தோனி தனது வாய்ப்புகளை வேண்டுமென்று பயன்படுத்தாமல் மறுத்து விட்டார் என பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்தார்.
ஆனால், டோனி மீது யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் குற்றம் சாட்டுவது இது முதன்முறை அல்ல. ஏற்கனவே பலமுறை தோனியின் மீதான தன் அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
English Summary
yuvarai father accusation to dhoni