WTC பைனல்! துணிச்சலான வியூகத்துடன் ஆடும் லெவனை அறிவித்த இந்தியா!   - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியானது இன்று இங்கிலாந்தின் சவுத்தம்டான் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

முன்னதாக இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டியில் விளையாடும் 11 பேர்கள் கொண்ட அணியை இந்திய அணி வெளியிட்டுள்ளது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே 5 பேட்ஸ்மேன்கள் 5 பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட் கீப்பர் என இந்திய அணி களமிறங்குகிறது. 

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் 3 வேகப்பந்து வீச்சாளர் உடன் களமிறங்கும் இந்திய அணி, வானிலை கை கொடுக்குமா என்று தெரியாத நிலையில் இரு சுழல் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது என்ற துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறது. அதே சமயம் சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் பேட்டிங்கும் அணிக்கு கைகொடுக்கும் என நம்புவதால், பேட்ஸ்மேனை குறைத்து 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 

அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள்,  விராட் கோலி (கேப்டன்),  ரோகித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா,  ரகானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஷ்வின்,  பும்ரா, இஷாந் சர்மா, முகமது ஷமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WTC Final indian team playing XI announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->