இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பெண்.!! சர்வதேச கிரிக்கெட்டில் முதல் நபராக.!!
women selected in icc
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையான ஜி.எஸ்.லட்சுமி, 2008 2009ஆம் காலகட்டத்தில் உள்நாட்டு பெண்கள் போட்டியில் 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் நடுவர் ஜி.எஸ்.லட்சுமி என்பது கூடுதல் சிறப்பு
இதுகுறித்து ஜி.எஸ்.லட்சுமி கூறும் போது, முதல் பெண் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது, ஒரு வீராங்கனையாகவும், கள நடுவராகவும் தான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் சர்வதேச போட்டிகளிலும் சிறந்த போட்டி நடுவராக செயல்படும் நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார்.