வாஷிங்டன் சுந்தர் அதிரடியால் இந்திய அணி வெற்றி!
Washington Sundar ind vs aus
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3வது ஆட்டம் இன்று ஹோபார்ட்டில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர்; சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா நீக்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 186 ரன்கள் குவித்தது. டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்து வீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 187 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியா, அபிஷேக் சர்மா (25) மற்றும் சுப்மன் கில் (15) என இருவரும் துவக்கத்தை வழங்கினர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்களும், திலக் வர்மா 26 பந்தில் 29 ரன்களும் சேர்த்தனர். அக்சர் படேல் 17 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜித்தேஷ் சர்மா 13 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் இந்தியா 18.3 ஓவரில் 188 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடர் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் முடித்துள்ளது.
English Summary
Washington Sundar ind vs aus