உற்சாகத்தில் விராட் கோலி ட்வீட்! "இ சாலா கப் நம்தே".,! - Seithipunal
Seithipunal


ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி ஐபிஎல் போட்டியில் விளையாட மிகுந்த  ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்த வருடம் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. 

அதன்படி, இந்திய விளையாட்டு துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று, வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த ஐபிஎல் போட்டி குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது, "அனைத்தையும் விட விசுவாசம் மிக முக்கியம். இந்த ஐபிஎல் போட்டியில் விளையாட மிக ஆவலாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

கோலியின் இந்த ட்வீட்க்கு, "இ சாலா கப் நம்தே" என்று ரசிகர்கள் ஒரு மாதிரியாக பின்னூட்டம் இட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat tweet about ipl 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->