கோலிக்கு உண்டான புதிய சிக்கல்! ஐசிசி அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Virat kohli fined for misbehave in field
இந்தியா கேப்டன் விராட் கோலிக்கு, நடுவர் அலீம் தாரிடம் ஆக்ரோஷமான முறையில் விக்கெட் கேட்டு முன்னேறியதற்காக அவரது ஆட்டக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் ஒரு குற்ற புள்ளியும் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் அவரது குற்றப்புள்ளி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
சவுத்தாம்ப்டனில் நேற்று நடைபெற்ற போட்டியில் விதிமுறையை மீறியதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஐ.சி.சி நடத்தை விதிமுறைகளின் நிலை 1 மற்றும் வீரர்கள் மற்றும் ஐ.சி.சி நடத்தை விதிகளின் பிரிவு 2.1 ஐ மீறிய குற்றவாளி என கோலி உறுதி செய்யப்பட்டார். இந்த விதியானது சர்வதேச போட்டியின் போது அதிகப்படியான முறையீடு செய்வது தொடர்பானது ஆகும்.
போட்டி நடுவர் கிறிஸ் பிராட் அளித்த தண்டனையை கோலி ஏற்றுக்கொண்டதால் இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2016 இல் திருத்தப்பட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து இது கோலியின் இரண்டாவது குற்றமாகும், ஏற்கனவே 15 ஜனவரி 2018 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பிரிட்டோரியாவில் நடைபெற்ற டெஸ்டின் போது முதல் குற்ற புள்ளியைப் பெற்றார்.
உலகக்கோப்பை போட்டியின் நடுவே இந்திய அணியின் கேப்டன் சர்ச்சையில் சிக்கியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
English Summary
Virat kohli fined for misbehave in field