கால்கள் வலுப்பெற... உயிர் கொடுக்கலாம் வாங்க விளையாட்டு.!
uyir kodukalam vanka
தற்போதைய காலக்கட்டத்தில் எல்லா வீடுகளிலும் அலைபேசிதான் குழந்தைகளின் விளையாட்டுத் திடலாக உள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பள்ளியிலும் படிப்பு, படிப்பு என்று மட்டுமே கூறி பள்ளியிலும் விளையாடுவது இல்லை. வீட்டிலும் விளையாடுவது இல்லை.
ஆனால் கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டுகள் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தருவதாக இருக்கின்றன.
அவ்வாறு கிராமங்களில் சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் உயிர்கொடுத்தல். இந்த விளையாட்டில் ஓடியாடுவதும் உண்டு. உட்கார்ந்து விளையாடுவதும் உண்டு.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒன்றாக சேர்ந்து விளையாடலாம்.
பயன்கள் :
கால்கள் வலுப்பெறும்.
உதவும் மனப்பான்மை மேலோங்கும்.
இலக்கை நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.