உலக கோப்பை தொடரில், இந்த 3 வீரர்கள் தான் அதிக ரன் எடுப்பார்கள்.! அடித்து கூறிய முன்னாள் வீரர்.!
top 3 runs scorers in world cup
10 அணிகள் பங்கேற்கும் 12 ஆவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.
இந்த உலக கோப்பை தொடர் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
உலக கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறி வருகின்றனர். மேலும் உலக கோப்பையை நடத்தும் நாடான இங்கிலாந்தும் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று பல முன்னணி வீரர்கள் தங்களது கருத்து தெரிவித்து வந்த நிலையில், இந்த உலக கோப்பை தொடரிலும் அதிக ரன் அடிக்க போகும் முதல் மூன்று வீரர்கள் யார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் கணித்து கூறியுள்ளார்.
அவர் கணித்தபடி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் முதலில் அதிக ரன் அடிப்பார், இரண்டாவதாக இங்கிலாந்தில் ஜோஸ் பட்லர் அதிக ரன் அடிப்பார். மூன்றாவதாக டேவிட் வார்னர் அதிக ரன் அடிப்பார் என்று கணித்து கூறியுள்ளார்.
English Summary
top 3 runs scorers in world cup