சென்னை அணியில் அதிரடியாக 3 மாற்றங்கள்.! தோனியின் அதிரடி முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!! - Seithipunal
Seithipunal


12வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. மே 12ம் தேதி இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

நேற்று முன் தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனால் இன்று நடைபெறவுள்ள குவாலிபையர் 2  போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது

இந்த போட்டியில் வென்றால் தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு  தயாராகி வருகின்றனர்.  

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 . இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட வாட்சன் சிறப்பாக விளையாடவில்லை. சென்னை அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் சொதப்பலாக இருப்பதால் அடுத்த போட்டியில் வாட்சன் தூக்கப்பட்டு, முரளி விஜய் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 . சென்னை அணியில் வேக பந்து வீச்சுக்கு தீபக் சாகரை மட்டுமே நம்பி இருப்பதால் மோகித் சர்மா, ஸ்காட் குகேஜிலின் ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

3 . சென்னை அணியை பொறுத்தவரை ஓப்பனிங், மிடில் ஆர்டர் இரண்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இதனால் மிடில் ஆர்டரில் துருவ் சோரேவையும் கொண்டுவரவும் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today match csk 3 changes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->