தமிழக முதல்வர் பழனிச்சாமி போட்ட ஒரு ட்வீட்.! ஒட்டுமொத்த தமிழகமும் நிம்மதி பெருமூச்சு!
tn cm tweet about ban Online Gambling in tn
இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதல்வரின் அந்த பதிவில்,
"இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது.
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோரையும் அதில் ஈடுபடுவோர்களையும் குற்றவாளிகளாக கருதி அவர்களை கைது செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு துரிதமாக எடுக்கும். #OnlineGambling’’ என முதல்வர் தெரிவித்துள்ளார்.
English Summary
tn cm tweet about ban Online Gambling in tn