பாரம்பரிய கலையில் சர்வதேச அளவில் தங்கம் வென்ற தமிழக வீரமங்கை.!
tamilnadu women got gold medal
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் பாண்டி இவரது மகள் பிரதீபா, பள்ளியில் படிக்கும் முதலே சிறு வயது முதலே சிலம்பாட்டத்தில் ஆர்வம் கொண்டு இருந்த அவர், இதற்காக முறையான பயிற்சியையையும் பெற்று அதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பழனியைச் சேர்ந்த வேங்கைநாதன் என்பவரிடம் சிறு வயது முதலே சிலம்பம் கற்ற பிரதீபா, மாவட்ட, தமிழக்த்தில் மாவட்ட அளவிலும், நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வாங்கிக் குவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, சென்ற வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் 18 வயது மாணவ, மாணவிகளுக்கான சிலம்பாட்ட பிரிவில் இந்திய சார்பில் கலந்துகொண்டவிளையாடிய பிரதீபா, போட்டியில் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றுள்ளார்.
இதையடுத்து, உலக அளவில் நடைபெற உள்ள சிலம்பாட்ட போட்டிகளில் பங்கேற்று அதில் தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என கூறும் பிரதீபா, இவர் மான்கொம்பு சுற்றுவதிலும் ஏற்கனவே வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
tamilnadu women got gold medal