இந்திய அணியில் சற்றுமுன் இடம்பெற்ற சிஎஸ்கே வீரர்.! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வருகின்ற 17 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ம் தேதி வரை டி20 உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. இந்த தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடைபெற உள்ளது.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுகிறது. 12 நாடுகள் விளையாடும் இந்த சுற்றில், இந்திய அணி குரூப் இரண்டில் இடம்பெற்றுள்ளது. 

மேலும், பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் முதல் தகுதி சுற்றில் தகுதி பெறும் இரண்டு அணிகள் இந்த பிரிவில் இடம்பெறுகின்றன. இந்திய அணி அனைத்து அணிகளுடனும் தலா ஒரு ஆட்டம் விளையாடுகின்றது.

இதில், முதல் இரு இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி வருகின்ற 24 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. 31ஆம் தேதி நியூசிலாந்து அணியையும், நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஆப்கானிஸ்தான் அணியையும் எதிர்கொள்கிறது.

நவம்பர் மாதம் 5 மற்றும் 8ம் தேதிகளில் முதல் தகுதி சுற்றில் தகுதி பெற்ற இரு அணிகளுடன் இந்திய அணி மோத உள்ளது.

20 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டன் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்ற அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் விளையாடுவார் என்று பிசிசிஐ சற்று முன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், அக்ஷர் பட்டேல் நெட் பவுலராக இடம் பெறுவார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 world cup shardul takur in team india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->