ஸ்வீடன் கிரிக்கெட் அணியில் ஒரு தமிழன்.! வாழ்த்து தெரிவித்த ஜான் டிரியோஸ்.! - Seithipunal
Seithipunal


ஸ்வீடன் கிரிக்கெட் அணியில் விளையாட தமிழகத்தை சேர்ந்த திரினேத் ராகுல் தேர்வாகியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மதன் பிரபு - வடிவாம்பிகா என்ற தம்பதிக்கு பிறந்தவர் திரினேத் ராகுல். இவர் 4 வயது முதல் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.

தீவிரமாக கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்ட திரினேத் ராகுல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் ஸ்வீடன் நாட்டுக்கு குடிபெயர்ந்தார்.

அங்கு மாவட்ட போட்டிகளில் முதலில் ராகுல் இணைந்து விளையாடியுள்ளார். பின்னர் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் இடம் பெற்று, தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

இந்த நிலையில் 19 வயதுக்குட்பட்ட ஸ்வீடன் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாட திரினேத் ராகுல்-க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. திரினேத் ராகுல்-க்கு உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான ஜான் டிரியோஸ் வாழ்த்து தெரிவித்து, அறிமுக வீரருக்கான தொப்பியையும் அணிவித்தார்.

தற்போது 15 வயதாகும் திரினேத் ராகுல், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். இவர் ஒரு ஆல்ரவுண்டர் வீரராக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sweden national cricket team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->