2022ம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தேர்வு.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 2022 ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி சிறந்த வீரர் மற்றும் அணிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2022 ஐசிசி டி20 சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ராசா, பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இங்கிலாந்தின் சாம் கரண், இந்திய அணியின் சூர்ய குமார் யாதவ் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ் 2022 ஐசிசி டி20 சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சூர்ய குமார் யாதவ் (வயது 32). மைதானத்தின் அனைத்து திசைகளிலும் விளையாடும் அற்புதமான திறமை கொண்டவர்.

இவர் கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் ஏராளமான சாதனைகளை முறியடித்துள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்ய குமார் யாதவ் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 1164 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டில் சூர்யா  68 சிக்ஸர்களை அடித்துள்ளார். இரண்டு சதங்கள் மற்றும் 9 அரை சதங்களை அடித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கோப்பையில் 6 இன்னிங்ஸ்களில் 3 அரைசதங்களைப் பதிவுசெய்து கிட்டத்தட்ட 60 சராசரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya Kumar yadav 2022 ICC T20 player of the year


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->