#BREAKING : இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது.!
suresh raina arrest
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதையடுத்து, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில மாதங்களாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.இதனால், மீண்டும் ஊரடங்கை கடுமையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கேளிக்கை விடுதியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு ஜாமீனில் சுரேஷ் ரெய்னாவை மும்பை போலீஸ் விடுதலை செய்தது.