களத்தில் சிஎஸ்க்கே.. கவலையில் சுரேஷ் ரெய்னா போட்ட ட்வீட்.! உருகும் ரசிகர்கள்.!
suresh raina about today match
ஐபிஎல் போட்டிகள் இந்த வருட்ம் நடக்குமா நடக்காதா என்று கிரிக்கெட் ரசிகர்கள் கவலைப் பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் ஐபிஎல் போட்டிகள் துவங்க இருக்கின்றன.
முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மிக ஆர்வமுடன் இப்போட்டியைப் பார்க்கின்றனர்.
இத்தகைய சூழலில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இரு வீரர்களும் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகி கொண்டனர். இது சென்னை அணிக்கு மிக பலவீனமாக கருதப்பட்டது. சின்ன தல இல்லாத டீமை பார்ப்பது கஷ்டமாக உள்ளது என்று அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னா தங்களது அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகள். நான் அங்கு இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. எனினும் என்னுடைய எல்லா வாழ்த்துகளும் உங்களிடம் உள்ளன. நல்ல உணர்வுகளை உங்களுக்கு அனுப்புகிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
suresh raina about today match