குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதி.! தனிமைப்படுத்தப்பட்ட கங்குலி.!
Sourav Ganguly family members corona positive
வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) செயலாளராரும், பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலியின் சகோதரருமான சினேகாஷிஷ் கங்குலியின் குடும்ப உறுப்பினர்களுக்கு கோவிட் -19 நோய்தொற்று இருப்பதை அந்த மாநில சுகாதாரத் துறை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
சினேகாஷிஷின் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோருக்கு இந்த நோய்க்கு கடந்த வார சோதனையில் உறுதி செய்தனர். அத்துடன் அவர்களுடைய உதவியாளருக்கு சமீபத்தில் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனியார் நர்சிங் ஹோமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரரான சினேகாஷிஷ்க்கு கோவிட் -19 தோற்று பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருந்துள்ளது எனவே, அவரை வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட அவர்கள் சனிக்கிழமையன்று மீண்டும் பரிசோதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களின் சிகிச்சை குறித்த முடிவுகள் மேலதிகாரிகள் பரிந்துரையில் எடுக்கப்படும். அவர்கள் வெளியேற்றப்படுவார்களா இல்லையா என்பது சோதனைகளின் முடிவைப் பொறுத்தது"என்று நர்சிங் ஹோம் வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary
Sourav Ganguly family members corona positive