மைதானத்தின் உள்ளே புகுந்த பாம்பு! ஆட்டம் பாதியிலே நிறுத்தம்! பிசிசிஐ வெளியிட்ட விடீயோ!  - Seithipunal
Seithipunal


இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி டிராபி தொடங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் பல இடங்களில் ரஞ்சி போட்டிகள் தொடங்கிய நிலையில், ஆந்திரா மற்றும் விதர்பா அணிகள் மோதிய போட்டியின்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

இதுவரை எத்தனையோ நிகழ்வுகளால் போட்டிகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும், தற்போது முதல்முறையாக விசித்திரமான ஒரு காரணத்தினால் போட்டியானது  தடைபட்டது. வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் மைதானத்தில் பாம்பு ஒன்று புகுந்து விட்டதால் அந்தப் பாம்பை அப்புறப்படுத்தும் வரை ஆட்டம் தடைபட்டது. 

ஆந்திரமாநிலம் முலப்பாடு என்னும் இடத்தில நடைபெற்று வரும் இந்த போட்டியின் போது பாம்பு நுழைந்துவிட்டது. இதனை வீடியோ பிடித்த பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. பாம்பு அப்பறப்படுத்தப்பட்ட பின்னர் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake enter the cricket stadium stops play


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->