சிஎஸ்கே வீரர்களை பங்கப்படுத்திய சேவாக்.! அரசு ஊழியர்கள் அப்செட்.!  - Seithipunal
Seithipunal


சென்னை அணி ஐபிஎல் 21வது ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடிய போது 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற பொழுது மூன்று பந்துகளில் கேதர் ஜாதவ் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 

கடைசி மூன்று பந்துகளில் 2 சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்து ஜடேஜா ஆறுதல் அளித்தார். இதனால், கேதர் ஜாதவ்-இன் பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில், இதுகுறித்து வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். 

168 ரன்கள் ஒன்றும் அவ்வளவு தூர இலக்கு இல்லை. சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் தான் தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறன். சிஎஸ்கே அணி வீரர்கள் அரசாங்க வேலை பார்ப்பதை போல கடமைக்கு விளையாடுகிறார்கள் என்று கிண்டல் செய்து இருக்கின்றார்.

வேலை செய்யாவிட்டாலும் கூட சம்பளம் சரியாக வந்துவிடும் என்று மெத்தனமாக சிஎஸ்கே அணியினர் விளையாடுவதாக சேவாக் கூறியது சிஎஸ்கே வீரர்களையும் கோபப்படுத்தி, அரசு ஊழியர்களையும் வெறுப்பேற்றி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shewak speech about csk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->