தமிழகத்தில் ஏழு துறைசார்ந்த திட்டங்களை தொடக்கி வைத்த தமிழக அரசு.! பொதுமக்கள் வரவேற்பு.!!
seven new projects starts in tamil nadu
புதிய ஏழு துறை சார்ந்த திட்டங்களை, காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் உடன் இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்த துறைகள் சார்ந்த அணைத்து அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த திட்டத்தில் கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். ,ஈரோடு பெருந்துறை, காஞ்சிபுரம் செய்யூர், வேலூர் மாவட்டம் நெமிலி மற்றும் ஆம்பூரில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளும் போன்ற துறை சார்ந்த திட்டங்கள் தொடங்கப்பட்டது.
கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிறப்பு மையக் கட்டிடம், தருமபுரி பாலக்கோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் தொடக்கி வைத்தார்.
English Summary
seven new projects starts in tamil nadu