இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பாகுபாடு.. தோனி குறித்து சக்லைன் பரபரப்பு தகவல்.!!
Saqlain Mushtaq Told about Dhoni Retirement
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், " இந்திய கிரிக்கெட் வாரியம் தோனி போன்ற வீரர்களை சரியான முறையில் நடத்தவில்லை.
தோனியின் ஓய்வு இதுபோல இருந்திருக்க கூடாது. இதனை நான் மனபூர்வமாக கூறுகிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் நினைத்ததையே நானும் நினைக்கிறன். இந்திய கிரிக்கெட் வாரியம் குறித்து நான் கூறியதை, இந்திய கிரிக்கெட் வாரியம் மன்னிக்க வேண்டும். ஆனால் இதுவே உண்மை. இது என்னை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தோனியின் விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தோல்வியை தழுவியுள்ளது.
தோனி இந்திய அணிக்காக கடைசியாக சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு விளையாடியிருந்தால் நன்றாக இருக்கும். எந்த ஒரு கிரிக்கெட் வீரமும் உயர்ந்த நிலையில் விடைபெற வேண்டும் என்று எண்ணுவார்கள். தோனிக்கும் இது கனவாக இருந்திருக்கும். வழியனுப்புவதற்காக போட்டி நடந்திருந்தால், ரசிகர்கள் வருத்தத்தில் இருந்திருப்பார்கள்.
கிரிக்கெட்டில் ஒரு மாணிக்கமாக இருப்பவர் தோனி. அவரே உண்மையான நாயகர். அவரை எண்ணி நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். ஐ.பி.எல் போட்டிகளில் அவர் கலந்துகொள்வது மகிழ்ச்சியை அளிக்கிறது " என்று தெரிவித்தார். மேலும், தோனியின் விலகளுக்கு பல அரசியல் பின்னணியும், பழிவாங்கும் பின்னணியும் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Saqlain Mushtaq Told about Dhoni Retirement