சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நட்சத்திர வீரர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.!! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நட்சத்திர வீரர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சாம் கரணுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு ஸ்கேன் செய்ததில் காயம் பெரிய அளவில் இருப்பதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், டி20 உலகக்கோப்பை தொடரியில் இருந்தும் விலகியுள்ளார்.  ஓரிரு நாட்களில் துபாயிலிருந்து நாடு திரும்புவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sam curran ruled out for ipl 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->