கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகிறார் சச்சின் டெண்டுல்கர்.!
sachin tendulkar coach of australia cricket team
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார்.
அந்நாட்டில் சில மாதங்களாக ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்வதற்காக பிப்ரவரி 8-ந்தேதி அன்று ‘புஷ்பயர் பேஷ்’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது.
காட்டுத்தீயை அனைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் உள்ளிட்டோரை அங்கீகரிக்கும் விதமாக இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் பயிற்சியாளர்களாக கோர்ட்னி வால்ஷ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
sachin tendulkar coach of australia cricket team