மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு இதுதான் காரணம்.! உண்மையை போட்டுடைத்த சச்சின்.!! - Seithipunal
Seithipunal


நேற்றைய முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணியை மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

150 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு மிக அருகில் சென்று  ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்  சாம்பியன் பட்டத்தையும்  தட்டி சென்றது.  

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டி குறித்து பேசிய  மும்பை இந்தியன்ஸ் அணியின் தூதரான சச்சின் டெண்டுல்கர் கூறியவை,

இந்த போட்டியை  லசித் மலிங்கா மிகவும் சிறப்புடன் முடித்து வைத்தார். ஒரு முனையில் க்ருனால் பாண்டியா அதிக ரன்கள் கொடுத்தபோதும், ஜஸ்ப்ரீத் பும்ரா மிகவும் அற்புதமான பந்துவீச்சால் சென்னை அணியை  கட்டுப்படுத்தினார். 

இந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் கடைசியாக விளையாடிய  இரண்டு இறுதி போட்டிகளும் எங்கள் அணிக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. இந்த போட்டியில் 6-15வது ஓவர் வரையிலான காலகட்டம் தான் இந்த போட்டியின்  மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதிலும் தோனியின் ரன்-அவுட் தான் ஆட்டத்தின்  போக்கையே மொத்தமாக மாற்றி எங்களுக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பை அமைத்து கொடுத்தது என்று சச்சின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin says about ipl final


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->