இந்திய அணியின் மிகப்பெரிய பலமே இவர் தான்.! புகழ்ந்து தள்ளிய சச்சின்.!! - Seithipunal
Seithipunal


10 அணிகள் பங்கேற்கும் 12 ஆவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 

இந்த உலக கோப்பை தொடர் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்திய அணி தன் முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி. இந்த போட்டியில் ஜடேஜா, பாண்டியா தவிர மற்ற அனைத்து வீரர்களும் சரியாக விளையாடவில்லை.

இந்நிலையில் கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர். தற்போது  நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரராக தோனி விளங்குவார் என்று கூறியுள்ளார். 

இது குறித்து சச்சின் கூறியவை, தோனியின் விக்கெட் கீப்பிங் அனுபவம் இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருக்கபோகிறது. ஒரு விக்கெட் கீப்பரால் தான் பேட்ஸ்மேன் முனையிலிருந்து மொத்த மைதானத்தையும் பேட்ஸ்மேனின் பார்வையில் பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல் ஆடுகளத்தில் தன்னையும் அவரால் கணித்துவிட முடியும். 

அதனால் அவர் வழங்கும் ஆலோசனைகள் மிகவும் முக்கியமானது. கேப்டன் கோலிக்கு, பந்துவீச்சாளர்களுக்கு அவரது ஆலோசனையின் நிச்சயம் பயன்படும். தோனி மாதிரியே ஒரு அனுபவ வீரர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது இந்திய அணிக்கு கிடைத்த கூடுதல் பலம் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin says about dhoni stamping


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->