மீண்டும் இவுங்க தான் கோப்பையை வெல்லுவாங்க! ஆதரவு தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
sachin open talk about mumbai indians
12 வது ஐபிஎல் சீசன் தொடரின் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவருமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
13வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்த ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என, சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், 'இந்த ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும். இதனை நான் உறுதியாக நம்புகிறேன். போட்டி எந்த இடத்தில் நடந்தாலும், எப்போதும் எனது ஆதரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான். மும்பை மற்றும் இந்தியன்ஸ் ஒன்றிணையும் போது, மும்பை இந்தியன்ஸ் என்று ஆகிறது' என்ற சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
English Summary
sachin open talk about mumbai indians