நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில்..புதிய சாதனையை படைத்த இந்திய வீரர்.! - Seithipunal
Seithipunal


இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர் ரோகித் சர்மா அதிக முறை 50 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான 5 ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் களம் இறங்கிய இந்திய கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 60 ரன்களை குவித்தார்.

இதன் மூலமாக ரோஹித் சர்மா இருபது ஓவர் போட்டிகளில் 21ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். ஏற்கனவே தான் அடித்து இருக்கும் 4 சதங்களையும் சேர்த்து மொத்தமாக 25ஆவது முறையாக 50 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கின்றார். 

முன்னதாக இந்த பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். தற்போது ரோஹித் சர்மா விராட் கோலியின் சாதனையை தகர்த்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit new record in india vs newzland match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->